கருங்குளம் அரசுப் பள்ளி ஸ்டோர் ரூமில் திடீர் தீ விபத்து; பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 1:52 PM IST

thumbnail

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என இரண்டு பேர் பணிபுரிந்து வருகிறனர். மேலும், இப்பள்ளியில் 16 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில், பழைய கட்டடத்தை ஸ்டோர் ரூம்-ஆக பயன்படுத்தி வருகின்றனர். 

இதில், கருங்குளம் வட்டாரத்தில் உள்ள துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஸ்கூல் பேக் மற்றும் பள்ளிச் சீருடைகளை மொத்தமாக வைத்திருந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலையில் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்புவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், சிறிது நேரத்தில் சுவிட்ச் போர்டில் இருந்து தீ விபத்து ஏற்பட்டு, ஸ்டோர் ரூம் முழுவதும் தீப்பற்றிக் கொண்டுள்ளது. 

ஸ்டோர் ரூம் ஓடு கட்டடம் என்பதால் தீ வேகமாக பரவியதில், அங்கு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீருடைகள் மற்றும் ஸ்கூல் பேக்குகள் எரிந்து நாசம் அடைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும், திருவைகுண்டம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டபோது மாணவ, மாணவிகள் யாரும் பள்ளிக்கு வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.