தருமபுர ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா தேரோட்டம்!

By

Published : Jun 8, 2023, 1:33 PM IST

thumbnail

மயிலாடுதுறை: தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. 

இந்த ஆலயத்தில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 30-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தற்போது இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகத் திருத்தேரோட்டம் இன்று காலை துவங்கியது. அந்த தேரில் சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். 

அதனையடுத்து தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தருமபுரம் ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தற்போது தேரோட்டம் நடைபெற்று வந்தது. இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதினம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு மேற்கொண்டார். 

மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை காலை, முந்தைய ஆதீனங்களின் ஐக்கிய கோயில்களான குருமூர்த்திகளுக்கு தற்போதைய ஆதினம் நாற்காலி பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சியும், நாளை மறுதினம் தற்போதைய ஆதீனத்தைப் பக்தர்கள் சிவிகைப் பல்லக்கில் அமர்த்தித் தூக்கிச் செல்லும் புகழ்பெற்ற பட்டணப்பிரவேசமும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.