திருவண்ணாமலை கோயில் உண்டியல் காணிக்கை வசூல் எவ்வளவு தெரியுமா?

By

Published : Mar 15, 2023, 2:11 PM IST

thumbnail

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் தை மற்றும் மாசி மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று துவங்கியது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டம், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றார்கள். இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை தை மற்றும் மாசி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்றது. 

அண்ணாமலையார் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் முன்னிலையில் சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். தை மற்றும் மாசி மாதத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி இரவு 7 மணி அளவில் நிறைவு பெற்றது. இதில் 2 கோடியே 81 லட்சத்து 18 ஆயிரத்து 750 ரூபாய் மற்றும் 405 கிராம் தங்கமும், 2,385 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.