'நான் ஜெயிலுக்கு போமாட்டேன்' - கோவை கோர்ட்டில் கத்தியை காட்டிய மிரட்டிய நபர்!

By

Published : Aug 9, 2023, 11:12 AM IST

thumbnail

கோயம்புத்தூர்: கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், தற்போது பிரியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில், இவர் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு காஞ்சனா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் விதித்தது. இந்த நிலையில், நேற்று மாலை மனைவியுடன் நீதிமன்றம் வந்துள்ளார். அப்போது நீதிமன்றத்தில் இவரை கைது செய்ய போலீசார் தயாராக இருந்ததால், அதைக் கண்டு ஆவேசமடைந்த பஷீர் 'நான் சிறைக்கு போகமாட்டேன்' எனக் கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.  

மேலும் மனைவி பிரியாவின் கைப்பையில் இருந்த சிறிய கத்தியை தூக்கிக் கொண்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதனைக் கண்ட காவல் துறையினர் அவரை சுற்றி பிடித்து நீதிமன்ற வளாகத்தில் இருந்து செல்வபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் கத்தியுடன் பஷீர் ரகளையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.