ஆலங்காயம் - ஜமுனாமத்தூர் வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14445265-thumbnail-3x2-tpt.jpg)
திருப்பத்தூர்:ஆலங்காயம் வனப்பகுதியில் இருந்து திருவண்ணாமலை வனக்கோட்டத்திற்குட்ப்பட்ட ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள சாலையில் ஒற்றைத் தந்தம் கொண்ட யானை சென்றுள்ளது. இதுதொடர்பாக ஜமுனாமத்தூர் வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். கடந்த 2021 மே மாதம் ஜமுனாமரத்தூர் வனப்பகுதியிலிருந்து சென்ற ஒற்றை ஆண் யானை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதே வனப்பகுதிக்கு வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST