புற்றுநோய்க்கு எதிராக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு

By

Published : Sep 13, 2019, 8:14 PM IST

thumbnail

சென்னை அண்ணாநகரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்பட்டிருந்த புற்றுநோய்க்கு எதிரான விழ்ப்பணர்வு நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். புற்றுநோய் வராமல் தடுப்பது, புற்று நோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிந்து அதிலிருந்து குணமாவது எப்படி போன்ற விழிப்புணர்வு கண்காட்சியை நடத்தினர். குறிப்பாக புகைப்பிடித்தல், தினசரி மது அருந்துதல், பெண்கள் 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், உடல் பருமன், உடல் உழைப்பின்மை, இளம் வயதிலேயே பூப்படைதல், ஒழுங்கற்ற அல்லது முறையற்ற மாதவிடாய், கருப்பை பிரச்னைகள் போன்றவற்றால் புற்று நோய் வருவதாகவும் இதிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.