'சிங்கிளாக உலா வந்த கொம்பன்' - பவானிசாகர் அணைப்பகுதியில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

By

Published : Apr 8, 2022, 9:16 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

thumbnail

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், கடும் வறட்சி நிலவுவதால், ஏராளமான காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று, புங்கார் கிராமம் அருகே தார் சாலையில் ஜாலியாக சுற்றித்திரிந்தது. பவானிசாகர் அணையின் நீர்தேக்கப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆண் காட்டு யானை நடமாடுவதைக் கண்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் அச்சமடைந்தனர். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அணை நீர்த்தேக்கப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள், மீனவர்கள் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.