சபரிமலை சிறப்பு பூஜை: இன்று ஒருநாள் மட்டும் நடை திறப்பு!
சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று ஒருநாள் மட்டும் (நவ. 3) திறக்கப்பட்டு பின்னர், பூஜை முடிந்து இன்று இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு முறை மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். கோயிலுக்கு வருகை தருவோர் தங்களின் இரு தவணை தடுப்பூசி சான்றிதழையோ அல்லது 72 மணிநேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை நெகடிவ் அறிக்கையையோ வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவ.16ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு, நவ.15ஆம் தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.