Palani ThaiPusam: பழனியில் நடந்த திருக்கல்யாண வைபவம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

By

Published : Feb 3, 2023, 10:44 PM IST

Updated : Feb 6, 2023, 4:07 PM IST

thumbnail

திண்டுக்கல்: பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று (ஜன.03) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் அருள்மிகு முத்துக்குமாரர்-வள்ளி தெய்வானை சமேதராக வெள்ளித்தேரில் ஏறி வீதிஉலா வந்து அருள்பாலித்தனர்‌.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா(Palani ThaiPusam) கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத்‌ திருவிழாவின் ஆறாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை கழுத்தில் மங்களநாணை சூட்டினார். 

தொடர்ந்து தம்பதி சமேதராக மணக்கோலத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதரராக எழுந்தருளிய அருள்மிகு முத்துக்குமாரசாமி நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்‌. தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மாலை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.