ETV Bharat / sukhibhava

கோவிட் ...இறப்பு அபாயத்தைக் குறைக்கும் ரெம்டெசிவிர்

author img

By

Published : Nov 25, 2022, 11:20 AM IST

கோவிட் அறிகுறிகள் தோன்றிய 9 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை வழங்கினால், அவர்களை மரண அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற வாய்ப்பு இருப்பதாக ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

டோக்கியோ: இதுதொடர்பாக டோக்கியோ மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ரெம்டெசிவிர் மரண அபாயத்தைக் குறைக்குமா? என்பதை யாரும் தெளிவுபடுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எனினும், ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் 2020-21 க்கு இடையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட 168 கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை விவரங்களை ஆய்வு செய்தனர்.

அறிகுறிகள் தோன்றிய 10 நாட்களுக்குப் பிறகு, ரெம்டெசிவிர் எடுத்துக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும்போது, 9 நாட்களுக்குள் ரெம்டெசிவிர் எடுத்துக் கொண்டவர்களுக்கு இறப்பு ஆபத்து குறைவாக இருப்பதை கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர் டேகோ புஜிவாரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆல்பா, டெல்டா, ஓமைக்ரான் பாதிப்பிலிருந்து காக்கும் கரோனா தடுப்பூசிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.