ETV Bharat / state

விருதுநகர், கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பேராசிரியை உயிரிழப்பு

author img

By

Published : Feb 8, 2020, 10:24 AM IST

விருதுநகர்: நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்தார்.

Virudhunagar latest news
Virudhunagar latest news

மதுரையை சேர்ந்த ஞானராஜ் ஜோஸ்மின் மேரி தம்பதியர் கோவிலுக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் அருப்புக்கோட்டை அருகே வந்துபோது, காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் கார் நிலைதடுமாறி நான்குவழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மறுபக்க சாலையில் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் ஜோஸ்மின்மேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜோஸ்மின்மேரி ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை ஆவார். படுகாயமடைந்த ஜோஸ்மின்மேரியின் கணவர் ஞானராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

டயர் வெடித்து நெடுஞ்சாலையில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: நகைக்காக பெண் அடித்துக் கொலை - குற்றவாளிகளைத் தேடும் போலீஸ்!

Intro:விருதுநகர்
07-02-2020

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் கார் டயர் வெடித்து தடுப்பு சுவரில் மோதி எதிரே வந்த கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை உயிரிழப்பு கணவர் படுகாயம்

Tn_vnr_03_car_accident_vis_script_7204885Body:மதுரையை சேர்ந்த ஞானராஜ் ஜோஸ்மின்மேரி தம்பதியர் தங்களது காரில் கோவிலுக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது பாளையம்பட்டி விளக்கில் இவர்கள் வந்த காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கார் நிலைதடுமாறி நான்குவழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மறுபக்க சாலைக்கு சென்று தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் பலமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காரில் பயணம் செய்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் உடனடியாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி படுகாயமடைந்த ஜோஸ்மின்மேரி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோஸ்மின்மேரி ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை என்பது குறிப்பிடத்தக்கது படுகாயமடைந்த ஜோஸ்மின்மேரியின் கணவர் ஞானராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விபத்தால் தூத்துக்குடி மதுரை நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.