ETV Bharat / state

'மக்காச்சோளப் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்' - வேதனைப்பட்ட விவசாயிகள்

author img

By

Published : Nov 26, 2019, 1:09 PM IST

விருதுநகர் : மக்காச்சோளப் பயிர்களை காட்டுப் பன்றிகள் நாசம் செய்வதைத் தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

virudhunagar former issue
farmers_issue

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இ. குமாரலிங்கபுரம், சின்னாக்காமன்பட்டி, மேட்டமலை, சின்னவாடி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2 ஆயிரத்து 400 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்களைப் பயிரிட்டு உள்ளனர்.

தற்போது அப்பகுதியில் உள்ள காட்டுப் பன்றிகள் பயிரிடப்பட்ட மக்காச் சோளப் பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும்; பன்றிகளை விரட்ட சிரமம் அடைவதாகவும்; இதனால் மக்காச்சோள விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

விருதுநகர் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மேலும், சென்ற ஆண்டு போல் அமெரிக்கன் படைப்புழுவால் வளர்ப்புப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இவற்றை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு பயிர்களைக் காப்பாற்ற தங்களுக்கு உதவ வேண்டும் எனக் கூறி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:

சாலையில் நாய் குறுக்கே வந்ததால் நேர்ந்த விபத்து: காவலர் உயிரிழப்பு

Intro:விருதுநகர்
25-11-19

மக்காச்சோளப் பயிர்களை காட்டு பன்றிகள் நாசம் செய்வது தடுக்க மற்றும் அமேரிக்கன் படைபுழு தாக்குதலில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

Tn_vnr_08_farmers_issue_vis_script_7204885Body:விருதுநகர் அருகே இ.குமாரலிங்கபுரம் பகுதியில் மக்காச்சோளப் பயிர்களை காட்டு பன்றிகள் நாசம் செய்து வருதாக கூறி அவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இ.குமாரலிங்கபுரம், சின்னாக்காமன்பட்டி, மேட்டமலை மற்றும் சின்னவாடி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2400 ஏக்கர் மக்காச்சோளப் பயிரிட்டு உள்ளதாகவும் தற்போது அப்பகுதியில் உள்ள வளர்ப்புப் பன்றிகள் மக்காச் சோளப் பயிர்கள் சேதம் அடைந்து வருவதாகவும் பன்றிகளை விரட்ட சிரமம் அடைவதாகவும் இதனால் மக்காச்சோள விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் பன்றிகளை விரட்டுபவர்களையும் பன்றிகள் தாக்கி காயம் அடையும் நிலை ஏற்படுவதால் மக்காச்சோள விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது சென்ற ஆண்டு போல் அமெரிக்கன் படைப்புழு பாதிக்கப்பட்ட மக்கள் விவசாயம் தற்போது வளர்ப்பு பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இவற்றை மாவட்ட நிர்வாகம் கருத்தில்கொண்டு பயிர்களை காப்பாற்ற தங்களுக்கு உதவ வேண்டும் எனக் கூறி பாதிக்கப்பட்ட விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

பேட்டி:
குருசாமிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.