ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக கொத்தனார் ஓட ஓட வெட்டிக் கொலை!

author img

By

Published : Jul 31, 2019, 10:19 AM IST

விருதுநகர்: முன்விரோதம் காரணமாக கொத்தனார் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

muder

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் அருண்பாண்டி (24). கொத்தனாரான இவர் விருதுநகர் டவுன் அடுத்த ஆத்துபாலம் அருகே நண்பர் சதீஸ்குமாருடன் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தனர். இதில் சதீஸ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சதீஸ்குமாரை மீட்டு சிகிச்சைக்காகவும் அருண்பாண்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காகவும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி-வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் விருதுநகரைச் சேர்ந்த குரங்கு விஜய், முத்தழகு, ஏஞ்சல் செல்வம் ஆகிய மூன்று பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:விருதுநகர்
31-7-19

முன் பகை காரணமாக வாலிபர் துரத்தி துரத்தி வெட்டிக் கொலை - கொலை கும்பல் தப்பி ஓட்டம்
Body:விருதுநகரில் முன் பகை காரணமாக வாலிபர் துரத்தி துரத்தி வெட்டிக் கொலை கொலையாளிகளை தனிப்படை அமைத்து காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த அருண் பாண்டி (24) கொத்தனர் தொழில் செய்து வருகிறார் இவர் மீது கடந்த 7.5.2018 ம் ஆண்டு விருதுநகரில் நடத்த முத்து காமாட்சி என்பவரின் வழக்கு விசாரனையில் உள்ளது.
இவரை இன்று மூன்று பேர் கொண்ட கும்பல் விருதுநகர் ஆத்துப் பாலம் அருகே வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஒடி விட்டது.
மேலும் அருண் பாண்டி உடன் இருந்த நண்பர் சதீஸ்குமார் என்பவருக்கு தலையில் வெட்டு காயத்துடன் உயிர் தப்பினார். சம்பவம் அறிந்து அங்கு வந்த விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் இறந்த அருண்பாண்டி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பினார்கள் மேலும் காயம் அடைந்த சதீஸ்குமார் சிகிச்சை பெற்றுவருகிறார்
இதை அடுத்து கொலை செய்தாக சந்தேகத்தின் பெயரில் விருதுநகரை சேர்த்த குரங்கு விஜய், முத்தழகு, ஏஞ்சல் செல்வம் ஆகிய மூவரை பஜார் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.