ETV Bharat / state

மார்கழியில் மஞ்சளில் நனைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்!

author img

By

Published : Jan 9, 2020, 2:56 PM IST

விருதுநகர்: மார்கழி மாதத்தின் எண்னைக் காப்பு உற்சவத்தின் முதல் நாளான இன்று ஸ்ரீ ஆண்டாளுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

மார்கழியில் மஞ்சலில் நனைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்!
மார்கழியில் மஞ்சலில் நனைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி நீராட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் ஆண்டாள் மார்கழி மாதம் பாவை நோன்பு இருப்பதற்கு தோழிகளுடன் திருமுக்குளத்தில் நீராட சென்றதை நினைவுகூரும் வகையில் எண்ணைக் காப்பு மார்கழி நீராட்ட உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மார்கழி மாதத்தின் எண்ணைக் காப்பு உற்சவத்தின் முதல் நாளான இன்று, ஸ்ரீ ஆண்டாளுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இது ஜனவரி 15 ஆம் தேதி வரை நாள்தோறும் நடைபெறவுள்ளது.

மார்கழியில் மஞ்சலில் நனைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்!

இந்த உற்சவத்தை காண உள்ளூர், வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். திருமணம் ஆகாத ஆண்கள் பெண்கள் எண்ணைக் காப்பு உற்சவதில் கலந்துகொண்டு மனதார ஆண்டாளை வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம்.

இதையும் படிங்க...உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முதலமைச்சரின் இரங்கலும் அறிவிப்பும்!

Intro:விருதுநகர்
09-01-2020

மார்கழி மாதம் ஆண்டாள் கோவில் எண்னைக் காப்பு உற்சவத்தின் முதல் நாள் இன்று ஸ்ரீ ஆண்டாளுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

Tn_vnr_01_aandal_temple_function_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மார்கழி மாதம் ஆண்டாள் கோவில் எண்னைக் காப்பு உற்சவத்தின் முதல் நாள் ஸ்ரீ ஆண்டாளுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி நீராட்டு உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம், ஆண்டாள் மார்கழி மாதம் பாவை நோன்பு இருப்பதற்கு தோழிகளுடன் திருமுக்குளத்தில்  நீராட சென்றதனை நினைவுகூறும் வகையில் எண்ணைக் காப்பு மார்கழி நீராட்ட உற்சவம் ஆண்டு தோறும் திருமுக்குளம் அருகில் உள்ள எண்ணைக்காப்பு மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாலை நேரத்தில் எண்ணைக் காப்பு உற்சவம் சிறப்பாக தொடங்கி வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை தினம் தோறும் நடைபெறும்.ஆண்டாள் சன்னதியில் இருந்து புறப்பட்டு மாட வீதிகளில் வலம் வந்து பெரிய கோபுர வாயிலில் போர்வை பணிகளைத் தொடர்ந்து அரையர் சேவை, தீர்த்தம், ஜடாரி, கோஷ்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீஆண்டாள் எண்ணைக் காப்பு மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு 365 விதமான மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட தைலக் காப்பு தங்க குடத்தில் ஸ்ரீஆண்டாளுக்கு சாற்றப்பட்டு மஞ்சள் நீராட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இவ் உற்சவத்தை காண உள்ளூர், மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.திருமணம் ஆகாத ஆண்கள் பெண்கள் எண்ணைக் காப்பு உற்சவதில் கலந்து கொண்டு மனதராக வேண்டினால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதிகம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.