ETV Bharat / state

சிவகாசி அருகே பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து!

author img

By

Published : May 31, 2020, 6:00 PM IST

விருதுநகர்: சிவகாசி அருகே பழைய இரும்புக் கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பழைய இரும்பு குடோனில் தீ விபத்து
பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள போர்டு ரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கம். இவர் பாலாஜி நகர்ப் பகுதியில், பழைய இரும்புக் கிடங்கு ஒன்றை வைத்துள்ளார்.

வழக்கம் போல பணி முடிந்து கடையை மூடிவிட்டு, வீட்டிற்குச் சென்ற நிலையில், திடீரென குடோன் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது. பின்னர் அருகில் இருந்தவர்கள் உடனே சிவகாசி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்னரே, அத்தீயை அணைத்தனர். மேலும் இத்தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

குடோனில் தீப்பற்றி எரியும் காட்சி

இந்த தீ விபத்து குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக காருக்கு தீ வைத்த நபர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.