ETV Bharat / state

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்

author img

By

Published : Jan 29, 2022, 10:27 PM IST

விருதுநகர் அருகே எதிர்பாராமல் பட்டாசு ஆலையில் நடந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி,இருவர் படுகாயம்
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி,இருவர் படுகாயம்

விருதுநகர்: நாட்டார் மங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் மாலை வழக்கமான பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு மீதமுள்ள கழிவுகளை எரிக்கும் பணியில் ஆறுமுகம், தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக உராய்வினால் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

படுகாயமடைந்த தெய்வேந்திரன் என்பவர் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும், குபேந்திரன் என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்ட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தப் பட்டாசு விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு ,மூவர் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.