ETV Bharat / state

கரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவர் கைது

author img

By

Published : Jun 26, 2021, 11:10 AM IST

காரியாபட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவர் கைதுசெய்யப்பட்டு அவரிடமிருந்து 10 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவர் கைது!
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவர் கைது!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சம்பங்கி தெருவைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு (75). இவர் அச்சம்பட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்தார்.

இது குறித்து, காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதனடிப்படையில், காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்திவந்தனர். விசாரணையில், சாமிக்கண்ணு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், பதுக்கிவைத்திருந்திருந்த சுமார் 10 கிலோ 250 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

இதைத் தொடர்ந்து சாமிக்கண்ணுவிடம் விசாரிக்கையில், அவருக்குச் சொந்தமான இடத்தில் சிவகங்கையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளது தெரியவந்தது.

தொடர்ந்து இருவரும் கைதுசெய்யப்பட்டு மேற்கொண்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.