ETV Bharat / state

'கறுப்புப் பூஞ்சை சிகிச்சைக்கு சிறப்பு வார்டு அமைக்கப்படும்':மா.சுப்பிரமணியம்

author img

By

Published : Jun 8, 2021, 7:19 AM IST

கறுப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்கு அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா சுப்பிரமணியம்
அமைச்சர் மா சுப்பிரமணியம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரசு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேற்று (ஜூன் 7) ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியம், "தமிழ்நாட்டில் கறுப்புப் பூஞ்சை நோயால் இதுவரை 1,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிய அரசிடமிருந்து கறுப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க 30 ஆயிரத்திற்கும் அதிகமான மருந்து தேவை என கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்து 60 எண்ணிக்கையிலான மருந்து அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதத்தை அரசு குறைத்துக் காட்டவில்லை. அதிமுக ஆட்சியில் தான் இறப்பு விகிதம் குறைத்துக் காட்டப்பட்டது" எனத் தெரிவித்தார்.

30 நாளில் 23 மாவட்டங்கள்

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து 30 நாட்களில், 23 மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளோம். முக்கியமாக கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று கரோனா நோயின் தாக்கம், பாதிப்பு குறித்து ஆய்வு செய்துள்ளோம்.

அமைச்சர் மா.சு செய்தியாளர் சந்திப்பு

ஒன்றிய அரசிடமிருந்து கரோனாவைக் கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பு மருந்துகள் கிடைக்கிறது. கறுப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: 'எத்தனை பெரிய அலைகள் வந்தாலும் அதனை திமுக சமாளிக்கும்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.