ETV Bharat / state

வேலூர் எஸ்பிக்கு கரோனா உறுதி

author img

By

Published : Jan 21, 2022, 1:36 PM IST

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வேலூர் எஸ்.பி.க்கு கரோனா உறுதி
வேலூர் எஸ்.பி.க்கு கரோனா உறுதி

வேலூர்: தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொற்றின் பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர், வேலூர் கோட்டாட்சியர், வேலூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ராஜேஷ் கண்ணனுக்கு இன்று (ஜனவரி 21) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இதையும் படிங்க: ஆஸ்கார் விருது பட்டியலுக்குத் தகுதிபெற்ற ஜெய்பீம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.