ETV Bharat / state

வேலூரில் கம்பளி வழங்கும் நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

author img

By

Published : Oct 23, 2019, 10:31 AM IST

வேலூர்: ஏலகிரி மலையில் நடைபெற்ற மலைவாழ் மக்களுக்கு கம்பளி வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டார்.

vellore District Collector's participation in the event, வேலூரில் கம்பளி வழங்கும் நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் அத்தனாவூர் பகுதியில் உள்ள இராமகிருஷ்ணா மடத்தில் மலைவாழ் மக்களுக்கு கம்பளி வழங்கும் விழா மற்றும் நடமாடும் மருத்துவ ஊர்தி தொடக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார். பின்னர் 500 மலைவாழ் மக்களுக்கு கம்பளிகள் மற்றும் நடமாடும் மருத்துவ ஊர்தியை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

vellore District Collector's participation in the event, வேலூரில் கம்பளி வழங்கும் நிகழ்ச்சி

மேலும் அத்தனாவூர் உண்டு உறைவிடம் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். புதியதாகத் தங்கும் விடுதி கட்டுமான வேலையை பார்வையிட்டார். அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'டெங்கு காய்ச்சல் வேலூர் மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவருகின்றது. மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன். மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் 46 பேர் பிடிபட்டுள்ளனர். போலி மருத்துவர்களை நம்பி மருத்துவம் பார்க்க வேண்டாம். டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட ஒவ்வொருவரும் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

இதையும் படிங்க: வேலூரில் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழிப்பு!

Intro:ஏலகிரி மலையில் நடைபெற்ற மலைவாழ் மக்களுக்கு கம்பளி வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு மற்றும் அத்தனாவூர் தொடக்க பள்ளியில் மாணவர்களுக்கு போர்வை வழங்கினார் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார் பிறகு அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்தினார்Body:

வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் அத்தனாவூர் பகுதியில் இயங்கி வரும் இராமகிருஷ்ணா மடம் ஹவுரா மாவட்டம் மேற்கு வங்காளம் பேலூர் இராமகிருஷ்ணா மடத்தின் கிளையாகும்

மலைவாழ் மக்களுக்கு கம்பளி வழங்கும் விழா மற்றும் நடமாடும் மருத்துவ ஊர்தி தொடக்கவிழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பங்கேற்று நடமாடும் மருத்துவ ஊர்தி கொடியசைத்து துவக்கி வைத்தார் 500 மலைவாழ் மக்களுக்கு கம்பளி வழங்கினார் பின்னர்

அத்தனாவூர் உண்டு உறைவிடம் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தினார் அப்பள்ளி 20 மாணவ மாணவிகளுக்கு போர்வை வழங்கினார்

புதியதாக தங்கும் விடுதி கட்டுமான வேலையை பார்வையிட்டார் பின்னர் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருத்துவரிடம் ஆய்வு மேற்கொண்டார்

ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில் டெங்கு காய்ச்சல் வேலூர் மாவட்டத்தில் மிக வேகமாக பரவி வருகின்றது 266 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்ப்பட்டு வருகின்றனர் தவல் வெளிவந்தது

எல்லா வைரல் பீவரை டெங்கு என்று மருத்துவம் பார்க்கவேண்டும் என்று மருத்துவருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளேன்

போலி மருத்துவர் உள்ளனர் 46 பிடிப்பட்டனர்
போலி டாக்டர்களை நம்பி மருத்துவம் பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்தினார் டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட ஒவ்வொருவரும் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.