ETV Bharat / state

மும்முனை போட்டி எல்லாம் கருத்தில் கொள்வதில்லை - துரைமுருகன்

author img

By

Published : Mar 12, 2021, 10:52 PM IST

மும்முனை போட்டி என்பதை எல்லாம் தாம் கருத்தில் கொள்வதில்லை எனவும், திமுக தொண்டர்களின் உழைப்பை பெற்று எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மும்முனை போட்டி எல்லாம் கருத்தில் கொள்வதில்லை
மும்முனை போட்டி எல்லாம் கருத்தில் கொள்வதில்லை

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக அவர் ரயில் மூலம் இன்று (மார்ச் 12) காட்பாடி வந்தார். அப்போது, அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பேரணியாக அழைத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு துரைமுருகன் மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மீண்டும் என் தொகுதி மக்களுக்கு பல்வேறு சாதனைகளைப் புரிய ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக கருதுகிறேன். பொதுச் செயலாளர் பொறுப்புக்கு ஏற்ப கழகத்திற்கு என்னாலான பணிகளைச் செய்வேன்.

மும்முனை போட்டி எல்லாம் கருத்தில் கொள்வதில்லை

தொகுதி மக்களை பொருத்தவரையில், அவர்களுக்கு பல திட்டங்களை வைத்துள்ளேன். ஐந்து ஆண்டுக்குள் அவற்றை நிறைவேற்ற முயற்சிப்பேன்" என்றார்.

பல்வேறு இடங்களில் அதிமுக, திமுக, மநீம என நேரடியாக மும்முனை போட்டி நிலவுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "மும்முனை போட்டி என்பதை எல்லாம் கருத்தில் கொள்வதில்லை, நாங்கள் கழகத் தொண்டர்களின் உழைப்பை பெற்று வெற்றி பெறுவோம். இத்தொகுதி மக்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை கட்டுவேன், தொழில் பேட்டையை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்பை பெற்றுத் தருவேன்.

மும்முனை போட்டி எல்லாம் கருத்தில் கொள்வதில்லை

தேர்தல் களத்தில் திமுக வெற்றி வாகை சூடுகிற வகையில் இருக்கிறது. இறுதியாக கருணாநிதி இல்லாவிட்டாலும், அவரால் பயிற்றுவிக்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்த கமல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.