ETV Bharat / state

திராவிட கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறது: வேலூரில் சீமான் பேட்டி

author img

By

Published : Jul 31, 2019, 10:49 PM IST

Updated : Jul 31, 2019, 10:59 PM IST

வேலூர்: முத்தலாக் விவகாரத்தில் திராவிட கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

seeman

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வேலூர் மாங்கா மண்டியில் இருந்து சாய்நாதபுரம் வரை பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"அதிமுக முத்தலாக் விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறது. மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிர்த்து வாக்குச்செலுத்தாமல் வெளிநடப்பு செய்தது. அவ்வாறு செய்யாமல் மசோதாவிற்கு எதிராக வாக்கு செலுத்தியிருந்தால் மசோதா நிறைவேறவிடமால் தடுத்திருக்கலாம், ஆனால் அதை செய்யாமல் மறைமுகமாக அம்மசோதா நிறைவேறுவதற்கு உதவியாய் இருந்துள்ளது. இதேபோல் என்ஐஏ விவகாரத்தில் திமுக அந்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் வாக்கு செலுத்திவிட்டு தற்போது அரசியலில் பழிவாங்குவதற்காக அச்சட்டம் பயன்படுத்தப்படும் என்று ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்.இது இவர்களுக்கு புதிதல்ல

வேலூரில் சீமான் பேட்டி

வேலூரில் இஸ்லாமியர்கள் வாக்குகள் 3 லட்சம் இருக்கிறது. அந்த வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் இந்த இரண்டு திராவிட கட்சிகளும் பதறுகிறது. அதனால் இரட்டை வேடம் போடுகிறது. தற்போது தேர்தல் களத்தில் இரண்டு பெரும் கட்சிகளும் ரூ.250 கோடி, ரூ.350 கோடி என முதலீடு செய்து வாக்குகளை பெற நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் உயர்ந்த லட்சியத்தை மக்கள் மத்தியில் சொல்லி ஓட்டு கேட்கிறோம். தற்போதைய காலகட்டத்தில் நாங்கள் முன்வைக்கின்ற அரசியல்தான் வெற்றிபெற வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே மக்கள் எங்களுக்கு அதிக ஆதரவு கொடுப்பார்கள்"என்றார்.

Intro:முத்தலாக் விவகாரத்தில் திராவிட கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறது வேலூர் தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்கு நாம் தமிழருக்கு வந்துவிடுமோ என இரண்டு கட்சிகளும் பதறுகிறது - வேலூரில் சீமான் பேட்டி
Body:வேலூர் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வேலூர் மாங்கா மண்டியில இருந்து சாய்நாதபுரம் வரை பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார் அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்

முத்தலாக் மசோதா கொண்டு வருவதில் அதிமுக ஆதரவு தெரிவிப்பது போல் தெரிவித்துவிட்டு இப்போது மாநிலங்களவையில் எதிர்க்கிறது. ஏனென்றால் இங்கே வேலூரில் இஸ்லாமியர்கள் வாக்குகள் 3 லட்சம் இருக்கிறது அந்த வாக்குகள் எனக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் இந்த இரண்டு கட்சிகளும் பதறுகிறது. என்ஐஏ விவகாரத்திலும் திமுக அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்கு செலுத்திவிட்டு தற்போது அரசியலில் பழிவாங்குவதற்காக செய்ததாக ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். அப்போதே எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டும். எனவே இரண்டு முகம் வைத்து இரட்டைவேடம் போடுகிறது காலங்காலமாக இந்த கட்சிகள் இதை தான் செய்கிறது இஸ்லாமிய பெண்களுக்கு இது ஏமாற்றம் ஏன் என்றால் இஸ்லாமிய சட்டப்படி இஸ்லாமிய பெண்களுக்கு முதலாக் தான் பாதுகாப்பானது அதை தடுத்து அவசரஅவசரமாக பழிவாங்கும் நோக்கத்துடன் பாஜக அரசு செயல்படுகிறது. வெளிநடப்பு செய்யாமல் திமுக அதிமுக முத்தலாக் மசோதாவுக்கு எதிர்த்து வாக்கு செலுத்தி இருந்தால் மசோதாவை தடுத்திருக்கலாம் ஆனால் அதை செய்யவில்லை. இந்த விவகாரத்தில் திராவிட கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறது திமுக அதிமுக ஆகிய கட்சிகள் பணம் கொடுக்கவில்லை என்றால் மக்கள் அவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டிய அவசியமே இல்லை பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குகின்றனர் மக்களுக்கு சேவை செய்து வாக்குகளை பெறுவதில்லை தற்போது தேர்தல் களத்தில் இரண்டு பேருமே பெருமுதலாளிகள் எனவே 250 கோடி 350 கோடி முதலீடு செய்து வாக்குகளை பெற நினைக்கிறார்கள் நாங்கள் உயர்ந்த லட்சியத்தை மக்கள் மத்தியில் சொல்லி ஓட்டு கேட்கிறோம் நாங்கள் முன்வைக்கின்ற அரசியல்தான் வெற்றி பெற வேண்டிய அவசியம் இருக்கிறது எனவே மக்கள் எங்களுக்கு அதிக ஆதரவு கொடுப்பார்கள். நடிகர் கமல் கட்சி வேலூரில் போட்டியிடாதது அவர்களது கட்சி நிலைப்பாடு அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம்" என்றார்Conclusion:
Last Updated : Jul 31, 2019, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.