ETV Bharat / state

‘தொடர் விடுப்பு கேட்டு முதலமைச்சருக்கு நளினி மனு' - வழக்கறிஞர் புகழேந்தி தகவல்

author img

By

Published : Jul 13, 2021, 8:30 AM IST

தன்னையும், கணவர் முருகனையும் தொடர் விடுப்பில் விடுவிக்கக்கோரி முதலமைச்சருக்கு நளினி மனு அனுப்பியது தொடர்பாக, இந்த வாரம் நாளினியின் தாயார் முதலமைச்சரை சந்திக்கவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் புகழேந்தி

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையிலுள்ள முருகன், பெண்கள் தனிச்சிறையிலுள்ள நளினி ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று (ஜூலை 12) சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, 'தனக்கும் கணவர் முருகனுக்கும் ஒரு மாதம் பரோல் வழங்கக்கோரி, ஏற்கனவே நளினி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி மனு அளித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' பிரிவுக்கு சிறைத்துறை மூலம் மனு அனுப்பியுள்ளார்.

தொடர் விடுப்பு கேட்டு கோரிக்கை:

அதில் 'தன்னையும், கணவர் முருகனையும் தொடர் விடுப்பில் விடுதலை செய்ய வேண்டும், விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி இரண்டரை ஆண்டுகள் ஆகிய நிலையில் அது குடியரசுத் தலைவருக்கும் அனுப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிவு 40 தண்டனை நிறுத்தி வைப்புச் சட்டத்தின் படி, தொடர்விடுப்பில் தன்னையும், தனது கணவர் முருகனையும் விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த கோரிக்கை தொடர்பாக நளினியின் தாயார் பத்மா இந்த வாரத்தில் முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தவுள்ளார்' எனத் தெரிவித்தார்.

வீடியோ காலில் பேச அனுமதி:

மேலும் முருகனும், நளினியும் இலங்கையிலுள்ள முருகனின் தாயிடமும், லண்டனிலுள்ள அக்காவிடவும் வீடியோ காலில் 10 நாள்களுக்கு ஒருமுறை 10 நிமிடம் பேச உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இது தொடர்பாக சிறைத்துறை, ஒன்றிய அரசுக்கு உத்தரவை அனுப்பியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி

வரும் ஜூலை 19ஆம் தேதி இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

அதற்குள் இவர்களை பேச அனுமதித்துவிட்டு, பேசியது தொடர்பான அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

இதையும் படிங்க: உறவினர்களுடன் வாட்ஸ்அப் வீடியோ கால் பேச நளினி, முருகன் கோரிக்கை: அனுமதியளித்த உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.