ETV Bharat / state

'முருகனை நளினி சந்திக்க அனுமதி மறுப்பது ஏன்?' ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Jun 22, 2020, 1:22 PM IST

வேலூர்: மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி மறுப்பது ஏன் என கேள்வியெழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தம்பதியரான நளினி, முருகன் ஆகிய இருவரும், சிறை விதிகளின்படி 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால் கரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக நளினியையும், முருகனையும் சந்தித்துப் பேச சிறை அலுவலர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால் முருகன் சிறையில் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், நளினி, முருகன் சந்தித்து பேச அனுமதி வழங்க கோரியும் நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (ஜூன் 22) நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு, சிறைவிதிகளின்படி இருவரையும் சந்தித்து பேசகூட அனுமதி மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த மனு குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க...சிறையில் முருகனுடன் நளினி சந்தித்துப் பேச அனுமதி கோரி ஆட்கொணர்வு மனு!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.