ETV Bharat / state

உருது மொழி வழி பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் - ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Aug 22, 2019, 9:41 PM IST

வேலூர்: உருது மொழி வழி பள்ளிகளை பாதுகாக்கக் கோரி வாணியம்பாடியில் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Primary school teacher

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் மத்திய, மாநில அரசுகளின் புதிய கல்விக் கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உருது மொழி வழியிலான பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.

தமிழ்நாட்டில் உருது மொழி வழி பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

உருது பள்ளிகளை ஆய்வு செய்து வந்த அலுவலர்களின் பணியிடங்களும் காலியாக்கப்பட்டு அந்த பள்ளிகளை கண்டும் காணாமல் தானாகவே அழியக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக தெரிவித்தனர். உருது மொழி வழி பள்ளிகளை யார் ஆய்வு செய்வார்கள் வளர்த்தெடுப்பார்கள் என்பதை பள்ளிக் கல்வித்துறை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், உருது மொழியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதுவதற்கு நீதிமன்றங்களுக்கு சென்று தான் உத்தரவு பெற்று தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை உள்ளதையும் சுட்டிக்காட்டினர். உருது மொழி பள்ளிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையில் அரசு பார்ப்பதற்கு இதைவிட சாட்சி வேறு எதுவும் இல்லை என்றனர்.

Intro:
உருது மொழி வழி பள்ளிகளை பாதுகாக்க கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து வாணியம்பாடி பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள்.


Body: வேலூர் மாவட்டம்.

வாணியம்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர், மத்திய மாநில அரசுகளின் புதிய கல்வி கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கூறியதாவது,

தமிழகத்தில் உருது மொழி வழியிலான பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது,

இன்றைய நிலையில், உருது பள்ளிகளை ஆய்வு செய்து வந்த அதிகாரிகள் கூட ( Block Development officers ) பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு அந்தபள்ளிகளை கண்டும் காணாமல் தனாகவே அழியக்கூடிய வகையில் தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கதாகும்,

உருது மொழி வழி பள்ளிகளை யார் ஆய்வு செய்வார்கள்?

வளர்த்தெடுப்பார்கள் என்பதனை தமிழக கல்வித்துறை தமிழக மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

மேலும் உருது மொழியிலான 10 -ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதுவதற்கு நீதிமன்றங்களுக்கு சென்று தான் உத்தரவு பெற்று தேர்வு எழுத வேண்டும் என்றால் உருது மொழி பள்ளிகளை மாற்றாந்தாய் பார்வையில் தமிழக அரசு பார்க்கிறது என்பதற்கு இதைவிட சாட்சியம் வேறு ஏதும் தேவையில்லை.


Conclusion: மேலும் உருது மொழி வழி பள்ளிகளை பாதுகாக்கவும் உருது மொழி வழி பள்ளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசின் பார்வைக்கு கொண்டுசெல்லவே நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம என தெரிவித்தனர்.


பேட்டி ; மணி

தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்டத்தலைவர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.