ETV Bharat / state

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்பட 2000 பேர் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Sep 29, 2020, 11:56 AM IST

Updated : Sep 29, 2020, 2:57 PM IST

வேலூர்: ஆர்ப்பாட்டத்தில் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காததாலும், நோய் தொற்று பரவும் வகையில் செயல்பட்டதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்பட 2000 பேர் மீது வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

dmk
dmk

தமிழ்நாடு முழுவதும் நேற்று (செப். 28) திமுக சார்பாக விவசாய சட்டத்திருத்த மசோதாக்களை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வேலூரில் உள்ள அண்ணா கலையரங்கம் அருகே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் பலவும் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காதது, கூட்டம் கூடியது, நோய் தொற்று பரவும் வகையில் செயல்பட்டது, பேரிடர் கால விதிமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அணைக்கட்டு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் மத்திய மாவட்ட செயலாளருமான ஏ.பி. நந்தகுமார், வேலூர் மாவட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் மாநகர செயலாளருமான பா. கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் மீது வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தமாக 2000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Sep 29, 2020, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.