ETV Bharat / state

வருவாய் அலுவலர்கள் சோதனையில் சிக்கிய கடத்தல் மணல்!

author img

By

Published : Oct 14, 2019, 5:19 PM IST

வேலூர்: காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் நடத்திய 36 மணி நேர அதிரடி சோதனையில் ரூ.31 லட்சம் மதிப்புள்ள 155 யூனிட் கடத்தல் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Vellore sand smuggling

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டைப் பகுதி பாலாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெறுவதாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் காவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் திவ்யா வாலாஜா வருவாய் ஆய்வாளர் சோனியா ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

கடந்த இரண்டு நாட்கள் இரவு பகலாக நடைபெற்ற சோதனையில் 29 லாரிகளில் மணல் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இதில் சென்னைக்கு கடத்தப்படவிருந்த ரூ.31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 155 யூனிட் மணலை அலுவலர்கள் லாரிகளுடன் பறிமுதல் செய்தனர்.

Vellore
மணல் பறிமுதல் செய்யப்பட்டப் போது

மேலும், வேலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை விவகாரத்தில் பல்வேறு முக்கியப்புள்ளிகள் ஈடுபட்டுள்ள நிலையில், துணிச்சலாக செயல்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க:

ஹார்டுவேர்ஸ் கடையில் கொள்ளை - ஹார்டிஸ்க்கையும் விட்டுவைக்காத கொள்ளையர்கள்

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் 2 பெண் வருவாய் அதிகாரிகள் தலைமையில் 36 மணி நேரம் நடைபெற்ற அதிரடி சோதனையில் 31 லட்சம் மதிப்புள்ள 155 யூனிட் மணல் பறிமுதல் - அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
Body:வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வாலாஜாபேட்டை ஆகிய பகுதிகளில் பாலாற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் காவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் திவ்யா மற்றும் வாலாஜா வருவாய் ஆய்வாளர் சோனியா ஆகியோர் தலைமையிலான குழுவினர் கடந்த இரண்டு தினங்களாக 36 மணி நேரம் இரவு பகலாக அதிரடி சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனையில் 29 டிப்பர் லாரிகளில் மணல் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது இதில் சென்னைக்கு கடத்தப்படவிருந்த ரூ.31 லட்சம் மதிப்புள்ள 155 யூனிட் மணலை அதிகாரிகள் டிப்பர் டிப்பர் லாரிகளுடன் பறிமுதல் செய்தனர் மணல் கொள்ளை விவகாரத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் துணிச்சலாக செயல்பட்ட பெண் அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பாராட்டியுள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.