ETV Bharat / state

இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயன்ற நபருக்கு போலீசார் வலை

author img

By

Published : Nov 3, 2022, 5:47 PM IST

திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை ஓட ஓட விரட்டி சென்று கொலை செய்ய முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடுமையான வெட்டுக்காயங்களுடன் அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Youth attempted murder in Trichy
Youth attempted murder in Trichy

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ரெங்கா நகரை சேர்ந்தவர் நிகில் (22). இவருக்கும் காந்தி நகர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. குறிப்பாக 6 மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் வந்த அரவிந்த் நிகிலின் பைக்கை அபகரித்துகொண்டு சென்றதாகவும், அதன்பின் நிகில் அரவிந்திடம் தகராறு செய்து பைக்கை மீட்டு கொண்டு வந்தாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (நவ. 3) மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் உள்ள நண்பர் வீட்டில் பேசிக்கொண்டிருந்த நிகிலை அங்கு வந்த அரவிந்த் கூர்மையான கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். அதைத்தொடர்ந்து நிகில் அங்கிருந்து தப்பி ஓடி ஆரம்பித்தார். இருப்பினும் நிகிலை அரவிந்த் விடாமல் ஓட ஓட விரட்டிக்சென்று கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே அரவிந்த் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து நிகிலை அருகிலிருந்தவர்கள் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரவிந்தை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்திற்கு மீறிய உறவை கண்டித்த மகன் கொலை... தாய் கைது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.