ETV Bharat / state

திருமண நாளன்று தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்

author img

By

Published : Dec 15, 2021, 12:11 PM IST

Updated : Dec 16, 2021, 12:18 PM IST

திருமண நாளன்று இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

திருச்சி: மணப்பாறை அடுத்த சீத்தப்பட்டியைச் சேர்ந்த அகஸ்டின் ராபர்ட் (22) கானப்பாடி புதூரைச் சேர்ந்த திவ்ய ஜெரினாவை (21) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு அதிபன் ஜோயல் என்ற மகனும், ஜயோக்கிய ஆதிரா என்ற மகளும் உள்ளனர். கணவன் அவ்வப்போது வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் கடந்த ஆறு மாதங்களாக இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 14) கணவர் வெளியில் சென்றிருந்த நிலையில் வீட்டிலிருந்த திவ்ய ஜெரினா தற்கொலையில் உயிரிழந்தார். இதனையடுத்து அகஸ்டின் ராபர்ட் வீடு திரும்பியபோது, மனைவி உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள் திவ்ய ஜெரினாவை உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா விசாரணை மேற்கொண்டுவருகின்றார். திருமண நாளன்று திவ்ய ஜெரினா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கர்ப்பத்தை மறைத்த மாணவி - தற்கொலைக்கு முயன்றபோது பிறந்த ஆண் குழந்தை

Last Updated : Dec 16, 2021, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.