ETV Bharat / state

காதலிக்குமாறு மிரட்டிய இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை

author img

By

Published : Apr 24, 2019, 5:56 PM IST

திருச்சி: கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டிய இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி நீதிமன்றம்

திருச்சி ஏர்போர்ட் திலகர் தெருவைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் அஜித்குமார் (21), கூலித்தொழிலாளி. அஜித்குமார் அப்பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் படிக்கும் 17 வயது இளம்பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் இவரை காதலிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் உள்ள அப்பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக அஜித்குமார் மிரட்டியுள்ளார்.

இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மகிழேந்தி, குற்றம்சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

திருச்சி நீதிமன்றம்
Intro:திருச்சியில் கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டிய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Body:திருச்சி: கல்லூரி மாணவியை மிரட்டிய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஏர்போர்ட் திலகர் தெருவைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் அஜித்குமார். வயது 21. கூலித்தொழிலாளி. அஜித்குமார் அப்பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் இவரை காதலிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் உள்ள அப்பெண்ணின் புகைப் படங்களை மார்பிங் செய்து அஜித் குமார் மிரட்டி உள்ளார். இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் அஜித்குமார் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அஜீத் குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி மகிழேந்தி விசாரித்து வந்தார். இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Conclusion:பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக அஜித்குமார் மிரட்டியுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.