ETV Bharat / state

அரை நிர்வாணத்துடன், வாயில் வாழைப்பழத்தை வைத்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

author img

By

Published : Jul 31, 2023, 10:41 AM IST

திருச்சியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாயில் வாழைப்பழத்தை வைத்து, அரை நிர்வாணத்துடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

வாயில் வாழைப்பழத்தை வைத்து, அரை நிர்வாணத்துடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
வாயில் வாழைப்பழத்தை வைத்து, அரை நிர்வாணத்துடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

வாயில் வாழைப்பழத்தை வைத்து, அரை நிர்வாணத்துடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருச்சி: சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு உட்பட 25க்கும் மேற்பட்டோர் மூன்றாவது நாளாக நேற்று (ஜூலை 30) வாயில் வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு அரை நிர்வாணத்துடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள்:

  • 2016ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறியது. பிறகு பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது. ஆகையால் விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.
  • மேட்டூரில் இருந்து கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.
  • அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால் தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேலும், கோயில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டும்
  • குறிப்பாக தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூபாய் 1க்கு விற்கும் பொழுது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து, அதில் 1 கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூபாய் 10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூபாய் 100 முதல் ரூபாய் 150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூபாய் 40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும்.
  • தனியார் நிறுவனங்கள் ரூபாய் 5 இலட்சம் கடன் கொடுத்து 48 மாதங்களில் ரூபாய் 7 லட்சம் கட்ட சொல்லி கையெழுத்து வாங்கி விட்டு ரூபாய் 6.2 லட்சம் கடனை திருப்பி கட்டிய பிறகு 71 மாதங்களாக்கி 1 இலட்சம், ஒன்றரை லட்சம் கட்ட சொல்லி 1 தவணை கட்டவில்லையென்றால் டிராக்டர், கார்களை தூக்கி செல்பவர்களை கைது செய்ய வேண்டும்.
  • மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது ,என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டும்.
  • 100 நாட்கள் வேலையாட்களை, கோடை காலமான 4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு, சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு 54 ரூபாயும், கரும்பு 1 டன்னுக்கு 8 ஆயிரத்து 100 ரூபாயும், வழங்கி உதவிட வேண்டும்.
  • காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.
  • விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய விவசாயிகள் இணைப்பு சங்கம் மாநில தலைவர் அய்யாகண்ணு, “ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவும், அண்ணாமலையும் விவசாயிகளுக்கு அள்ளிக் கொடுப்பதாக பேசுகிறார்கள். ஆனால் விவசாயிகளுக்கு எதுவுமே தரவில்லை.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், விளைவிக்கும் விளைபொருளுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய போது, விவசாயிகளுக்கு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளோம் என கூறுகிறார்கள்.

இதனால் விவசாயிகளின் வாயில் வாழைப்பழத்தை வைத்து விட்டார்கள். ஆகையால் வாயில் வாழைப்பழத்தை வைத்து எங்களது கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் நாளை (ஜூலை 31) சோற்றில் முழு பூசணிக்காயை, மறைக்கும் போராட்டம் நடத்த போவதாக கூறினார்.

இதையும் படிங்க: "விடியா மூஞ்சி ஆட்சியில் 25% கமிஷன்" - திமுக அரசை விளாசிய டிடிவி தினகரன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.