திருச்சி: மாவட்ட நீதிமன்ற வாயிலுக்கு முன்னதாக நேற்று ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள அவரை மீட்டு 50 விழுக்காடு உடல் எரிந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினரின் விசாரணையில், தீக்குளித்தவர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சேகர்(58 ). இவர் திருச்சி பழைய தஞ்சாவூர் ரோடு மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே வெல்டிங் பட்டறை வைத்துள்ளார்.
2019 ஆண்டில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.7 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்காக மாதம் ரூ.20,810 தவணைத் தொகையை செலுத்தி வந்த நிலையில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் இவரது வீட்டிற்கு வந்து மிரட்டியும், தகாத வார்த்தையில் திட்டியும் உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய சேகர், தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:VIRAL VIDEO: மனைவியின் காதலனை கொடூரமாகக் கொன்ற கணவன்