ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம்: தமுமுக ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Mar 9, 2020, 4:32 PM IST

திருச்சி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

caa protest
caa protest

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தமாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே, மாவட்ட தலைவர் உதுமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இதில், எஸ்டிபிஐ கட்சி ஹஸன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஹபீப் ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

இதுகுறித்து மாவட்ட தலைவர் உதுமான் அலி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்ற மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: திருப்பூரில் சிஏஏ-வுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இருதரப்பினர் குவிந்ததால் பதற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.