ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ...மகள் கண்முன் உயிரிழந்த தந்தை

author img

By

Published : Aug 19, 2022, 9:02 AM IST

Updated : Aug 19, 2022, 9:24 AM IST

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மகளின் கண் முன்னே தந்தை உயிரிழந்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் மகள் கண் முன்னே உயிரிழந்த தந்தை
தேசிய நெடுஞ்சாலையில் மகள் கண் முன்னே உயிரிழந்த தந்தை

திருச்சி: மணப்பாறை அடுத்த பூசாரிகளம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(40). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது இரண்டு வயது மகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தனது மகள் மற்றும் உறவினரின் இரண்டு வயது மகனுடன் தனது வாகனத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அவ்வழியே அதிவேகமாக சென்னை நோக்கி சென்ற கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் தியாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த சிறுவன் மற்றும் சிறுமி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வையம்பட்டி காவல்துறையினர், காரை ஓட்டிச் சென்ற சென்னையைச் சேர்ந்த இக்னீசியஸ் விவேக் (31) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை

Last Updated : Aug 19, 2022, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.