ETV Bharat / state

தேவேந்திரகுல வேளாளர்: அரசாணை வெளியிடக் கோரி மனிதச் சங்கிலி போராட்டம்!

author img

By

Published : Dec 15, 2020, 12:16 PM IST

Updated : Dec 15, 2020, 1:21 PM IST

திருச்சியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டோர்
மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டோர்

தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் ஏழு சாதி உள்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில் முதலமைச்சரின் அறிவிப்புத் தொடர்பாக அரசாணை வெளியிடக் கோரி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் குருச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயம் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசானது இந்தப் பரிந்துரையை ஏற்று, தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும். மேலும் பட்டியலிலிருந்து ஏழு சமுதாயங்களையும் வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 30 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை: ஆட்சியரிடம் மனு

Last Updated : Dec 15, 2020, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.