ETV Bharat / state

திருச்சியை திருவிழாவாக மாற்றிய ‘HAPPY SALAI' நிகழ்ச்சி.. ஏராளமான மக்கள் பங்கேற்பு..!

author img

By

Published : Jul 23, 2023, 4:17 PM IST

தமிழ்நாட்டில் சமீப காலமாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியாக 'Happy Street' நிகழ்ச்சி திருச்சியிலும் 'Happy Salai' என்ற பெயரில் திருவிழா போல கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வயது வரம்பின்றி ஏராளமானோர் பங்கேற்றனர்.

Etv Bharat
Etv Bharat

திருச்சியை திருவிழாவாக மாற்றிய ‘HAPPY SALAI' நிகழ்ச்சி

திருச்சி: தினமும் காலை எழுந்த உடனே வேலைக்குத் தயாராகி, ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருக்கும் மக்களின் மனமகிழ்ச்சி மற்றும் புத்துணர்விற்காக வயது வரம்பின்றியும், பாலின பேதமின்றியும் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் வகையில் சமீப காலமாக தமிழ்நாட்டில் மனமகிழ் நிகழ்ச்சி '(Happy Street)' நடைபெற்று வருகிறது. சென்னை, கோயம்புத்தூர், உதகை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் தமிழ்நாடு காவல் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பாக விழிப்புணர்வு மனமகிழ் நிகழ்ச்சி '(Happy Street)' என்ற நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் திருச்சி மாநகரத்தில் வசிக்கும் பொதுமக்கள், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இன்று (ஜூலை 23) பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை திருச்சி நீதிமன்றம் MGR சிலை அருகில் Student Road-ல் "மனமகிழ் நிகழ்ச்சி" "Happy Salai" Young Indians என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருச்சி மாநகர காவல் துறை சார்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா, மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், Drone Shows, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திருவிழா (Kids Carnival), Zumba, மூத்த குடிமக்கள் கார்னர் (Senior Citizen Corner), செல்லப்பிராணிகள் கண்காட்சி (Pot Shows), ஆட்டம் பாட்டம் (Dance Jocky), உடல் பரிசோதனைகள் (Health Screening), உணவுகள் விற்பனையகம் (Food Stalls) மற்றும் காவல் துறை சார்பில் ஆயுத கண்காட்சி, போலீஸ் இசைக்குழு (Police Band Music), காவல் துறை துப்பறியும் மோப்ப நாய் படை கண்காட்சி மற்றும் பயனுள்ள பொருள்கள் விற்பனையகம் (Stalls) என 30க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் திருச்சி மாநகரில் உள்ள பொதுமக்கள் அதிகாலை 6 மணிக்கே தங்களது குடும்பத்துடன் வருகை புரிந்து மகிழ்ச்சியாக ஆடல், பாடல், விளையாட்டு என கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியின் மூலம் திருச்சி மாநகர பொதுமக்களிடையே சாலை மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்தும், மது மற்றும் போதைப் பொருள் பழக்க வழக்கங்களிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த 'Happy Salai' நிகழ்ச்சியில் குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என வயது வரம்பு இல்லாமல் அனைவரும் சமமாக ஒன்று கூடி மகிழ்ச்சியாக சத்தமிட்டு ஆடி, பாடி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் கும்மியாட்ட கலை நடைபெற அதிமுக உறுதுணையாக இருக்கும் - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.