ETV Bharat / state

விளையாட்டு பொம்மைகளில் மறைத்து தங்கம் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய குருவிகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 9:31 PM IST

Gold seized in Trichy Airport: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட 12.84 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் விளையாட்டு பொம்மைகளில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 216 கிராம் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் விளையாட்டு பொம்மைகளில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 216 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் விளையாட்டு பொம்மைகளில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 216 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது. விமானத்தில் பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் அதிரடியாக‌ பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கத்தை பொம்மைகளில் 6 உருளை வடிவில் 216.500 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கத்தை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 12.84 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், சுங்கதுறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் எந்த நோக்கத்திற்காக விளையாட்டு பொம்மைகளில் சட்ட விரோதமாக தங்கத்தை கடத்தி வந்த்ள்ளார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது பாஸ்போர்ட் , விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா வேறு வழக்குகள் பயணியின் மீது எதுவும் நிலுவையில் உள்ளதா ? இவர் எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளார் என அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

இதையும் படிங்க: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள்! சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?

சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், பாம்புகள் உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் "குருவி" என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவரகள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கையாக உள்ளது. தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

இதைபோன்று மூன்று நாட்களுக்கு முன் துபாயில் இருந்து திருச்சி விமானம் நிலையத்திற்க்கு லுங்கியில் நூல் இழைகளாக கடத்தி வந்த சுமார் 16 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: தென்காசியில் தொடரும் குடிநீர் பிரச்சனை; குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.