ETV Bharat / state

மருத்துவ முகாம்களின் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை!

author img

By

Published : Jul 15, 2020, 1:27 AM IST

சென்னை: மே மாதம் முதல் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களில் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Chennai Medical Camp
Chennai Medical Camp

கரோனா வைரஸால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைகின்றனர். இருப்பினும் குணமடைந்தவர்களின் சதவீதமும் அதற்கு சரி சமமாக உள்ளது.

இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது . மே எட்டாம் தேதி முதல் நேற்றுவரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 17 ஆயிரத்து 134 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 10,65,981 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

சிறு அறிகுறி இருந்த 50 ஆயிரத்து 599 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 12,237 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று மட்டும் 525 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதிகபட்சமாக அண்ணா நகரில் 61 மருத்துவ முகாம்களும் அடுத்தபடியாக தேனாம்பேட்டையில் 51 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.

நேற்று நடைபெற்ற 525 மருத்துவ முகாம்களில் மொத்தம் 28 ஆயிரத்து 808 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 2322 நபர்களுக்கு தொற்று அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:அரியலூரில் 100 ரூபாய்க்கு 5 முகக்கவசம் இலவசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.