ETV Bharat / state

சென்னையில் இன்று 30 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை!

author img

By

Published : Jul 16, 2020, 10:46 PM IST

சென்னை: இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 900 பேர் மருத்துவ முகாம் மூலம் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Corona test for 30 thousand people in Chennai
Corona test for 30 thousand people in Chennai

தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் கரோனா தொற்று அதிதீவிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும், மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் நோய்த்தொற்று குறையாமல் குறிப்பிட்ட பகுதிகளான தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தப் பரவலைத் தடுக்கும் ஒரு பகுதியாக தன்னை உள்ள 15 மண்டலங்களிலும் நாள்தோறும் மாநகராட்சி, சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இன்று 521 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 53 மருத்துவ முகாம்களும், தேனாம்பேட்டையில் 51 முகாம்களும், அண்ணா நகரில் 50 முகாம்களும் நடைபெற்றன. 521 மருத்துவ முகாம்களில் 30 ஆயிரத்து 900 பேருக்கு பரிசோதிக்கப்பட்டன.

அதில், 1797 பேருக்கு சிறுஅறிகுறி இருந்ததால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாள்தோறும் நடைபெறும் மருத்துவ முகாமினை அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த காவலர்: ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.