ETV Bharat / state

திருப்பத்தூரில் புதிதாக 41 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Sep 12, 2020, 8:50 PM IST

திருப்பத்தூர்: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று புதியதாக 41 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு: திருப்பத்தூரில் புதிதாக 41 பேருக்கு கரோனா உறுதி!
Thiruppathur corona cases

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில் இன்று (செப்.12) புதியதாக மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்து 631 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் இதுவரை மூன்று ஆயிரத்து 73 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 73 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 66 ஆயிரத்து 732 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், ஆயிரத்து 764 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். மேலும், மூன்று ஆயிரத்து 949 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் இன்று புதிதாக 256 பேருக்கு கரோனா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.