ETV Bharat / state

தொழில் நலிவடைந்ததால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

author img

By

Published : Sep 26, 2019, 3:14 PM IST

திருப்பூர்: பின்னலாடை தொழில் நலிவடைந்ததால் நிறுவனத்திலேயே இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட வாலிபர் வீட்டின் முன்பு அமர்ந்திருந்த பொதுமக்கள்

திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காஜா உசேன். இவர் திருப்பூர் வள்ளியம்மை நகர் பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்திவந்தார். மத்திய அரசு அறிவித்திருந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் இவரது தொழில் நலிவடைந்தது.

தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

இதனால் விரக்தியிலிருந்த அவர் நிறுவனத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் இளைஞர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மர்மப் பொருள் வெடித்து சாமியார் உயிரிழப்பு!

Intro:திருப்பூரில் பின்னலாடை தொழில் நலிவடைந்து அதன் காரணமாக சிறிய அளவில் நிறுவனம் நடத்தி வந்தவர் நிறுவனத்திலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Body:திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் காஜா உசேன் இவர் திருப்பூர் வள்ளியம்மை நகர் பகுதியில் சிறிய அளவில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார்.பணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி ஆகையால் தொழில் நலிவடைந்த சூழ்நிலையில் தற்போது சொந்தமாக நிறுவனம் நடத்துவதை கைவிட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியினை மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொண்டதிலும் தனக்கு தேவையான அளவு ஆர்டர் கிடைக்காத விரக்தியில் இருந்து வந்துள்ளார் மேலும் வெளியில் கடன் பெற்று தொழில் நடத்தி இந்த சூழ்நிலையில் தற்போது கடன் கட்டமுடியாத நிலையில் விரக்தி அடைந்த காஜா உசேன் நேற்று இரவு வள்ளியம்மை நகர் பகுதியில் உள்ள தனது நிறுவனத்திலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இன்று காலை காஜா உசேன் தூக்கில் தொங்கியதை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.