ETV Bharat / state

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது!

author img

By

Published : Jul 26, 2020, 3:52 PM IST

திருப்பூர்: சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Vijay
Vijay

திருப்பூர் மாவட்டம், காசிபாளையம் வனப் பகுதியில் முறைகேடாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அத்தகவலின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். இந்நிலையில் சோதனையின்போது முழு ஊரடங்கிலும் மதுபானங்களை விற்பனை செய்து வந்த நபர் பிடிபட்டார்.

இதையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜய் (21) என்பதும், முழு ஊரடங்கான இன்று மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்தால் அதிக வருமானம் பார்க்கலாம் என நேற்று மதுபானங்களை வாங்கி விற்பனை செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.