ETV Bharat / state

2 எஸ்ஐகளுக்கு கரோனா; காவல் நிலையங்கள் மூடல்!

author img

By

Published : Jun 18, 2020, 3:52 AM IST

திருப்பத்தூர்: வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிவரும் இரு காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் பணியாற்றிய காவல் நிலையங்கள் மூடப்பட்டன.

Corona confirms to Assistant Police Inspectors; Police stations to be closed
Corona confirms to Assistant Police Inspectors; Police stations to be closed

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு சென்னையிலிருந்து பணிமாறுதல் காரணமாக காவல் உதவி ஆய்வாளர் நேற்று பணிக்கு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அதேபோல் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட இருவரும் பணியாற்றிவந்த காவல் நிலையங்கள் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.