ETV Bharat / state

திருப்பூரில் காருக்குள் ரகசிய மது விற்பனை - 4 பேர் கைது!

author img

By

Published : Apr 20, 2020, 6:21 PM IST

திருப்பூர்: ஊரடங்கில் சட்ட விரோதமாக காருக்குள் வைத்து மது விற்பனை செய்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர்
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், ராயபுரம் பகுதியில் காரில் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், அப்பகுதியில் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, காரில் மதுபானம் விற்பனை செய்து வந்த 5 பேரை, காவல் துறையினர் பிடிக்க முயற்சித்தனர். அதில், ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், 4 நபர்களை காவல் துறையினர் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், நான்கு பேரும் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், ஜான், தனபால்,செல்வகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

திருப்பூரில் காருக்குள் ரகசிய மது விற்பனை

இதையடுத்து, 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 227 குவார்ட்டர் பாட்டில்களையும், கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிச் சென்ற குற்றவாளியையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாய் இருந்த மகன் கொலை: தாய் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.