ETV Bharat / state

ஆம்பூரில் சாலை விபத்து: இளைஞர் உயிரிழப்பு!

author img

By

Published : Mar 16, 2021, 10:40 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் உயிரிழப்பு
ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்றாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் இன்று (மார்ச் 16) மாலை வேலூரிலிருந்து ஆம்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.

அப்போது வடபுதுப்பட்டு அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனம், இவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி மணிகண்டன் சாலையின் நடுவே உள்ள இரும்புக் கம்பத்தில் மோதி கீழே விழுந்தார்.

தொடர்ந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர், மணிகண்டனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.