ETV Bharat / state

திருப்பத்தூரில் பரபரப்பு - கைதான கணவனுக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

author img

By

Published : Mar 21, 2022, 7:28 PM IST

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்புக் கூட்டத்தில் பெண் ஒருவர் திடீரென தன் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் பரபரப்பு- கைதான கணவனுக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்
திருப்பத்தூரில் பரபரப்பு- கைதான கணவனுக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர்ப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்த பிரபல சாராய வியாபாரி, மகேஸ்வரி. இவரை சுமார் 12 முறை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இருந்தபொழுதும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு, குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தபோதிலும், அவருடைய கூட்டாளிகள் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் அப்பகுதியில் உள்ள கோயில் திருவிழாவின்போது சாராய கும்பல் மற்றும் இளைஞர்கள் இடைய மோதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. மோதல் காரணமாக, அப்பகுதி இளைஞர்கள் தாலுகா காவல் நிலையத்தில் சாராய விற்பனை குறித்துப் புகார் கொடுத்துள்ளனர்.

அதன்பின்னர் அன்று மாலை சாராய வியாபாரியின் அடியாட்கள் சிலர், பயங்கர ஆயுதங்களுடன் வந்து அப்பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கை,கால், மண்டைகள் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் காரணமாக வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேதாஜி நகர்ப்பகுதியைச் சேர்ந்த முருகனையும்(35) கைதுசெய்து, தற்போது அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

இதனை அறிந்த அவருடைய மனைவி மணிமேகலை (30) மற்றும் தனது இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண்குழந்தை உட்பட மூன்று குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது யாரும் எதிர்பாராதவகையில் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து, தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

இதனால் காவல்துறை மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சியுற்றனர். பின்னர் வாணியம்பாடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் மணிமேகலை கையிலிருந்த மண்ணெண்ணெய் கேனைப் பிடுங்கி வெளியே கொண்டு வந்தார்.

மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்திற்கு மணிமேகலை அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாண்டுபோன மகனை மார்பில் சுமந்த தந்தை.. ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் பரிதாபம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.