ETV Bharat / state

காலி மனை விவகாரம்: ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளிவைத்த கிராமத்தினர்

author img

By

Published : Jan 5, 2021, 6:24 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே காலி மனை தகராறில் கட்டப்பஞ்சாயத்து செய்து குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால் மனமுடைந்த குடும்பத்தினர் கிராம சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம் ஹரி குடும்பத்தார்
தர்ணா போராட்டம் ஹரி குடும்பத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடச்சேரி புதுமனை பகுதியில் ஹரி என்பவர் தனது பெற்றோர் சம்பத், கண்ணகியுடன் வசித்துவந்துள்ளார். இவர் அதே பகுதியில் கடந்த மாதம் 8ஆம் தேதி செல்வராஜ் என்பவரிடமிருந்து 925 சதுர அடி கொண்ட காலி மனை இடத்தினை வாங்கி ஆவண எண்: 7890/2020 இன்படி கிரையம் பெற்று, நில அளவையர் மூலம் அளவை மேற்கொண்டு கல் பதித்துள்ளார்.

இதனையறிந்த பக்கத்து மனையைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பஞ்சாயத்தாரிடம் தெரிவித்ததின்பேரில், ஊர் நாட்டாமைதாரர்கள் துரைராஜ், குமார், வேலுமணி, கண்ணன் உள்ளிட்டோர் இருதரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், அரசு நில அளவையர் மூலம் மனை அளவை மேற்கொண்டு கல் பதித்தது சரியான அளவு இல்லை எனக் கூறி 100 சதுர அடி இடத்தினை கோவிந்தராஜுக்கு விட்டுத் தருமாறு ஹரி குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர்.

தர்ணா போராட்டம் ஹரி குடும்பத்தார்
தர்ணா போராட்டம் ஹரி குடும்பத்தார்

இதனையடுத்து, ஹரியின் தாயார் கண்ணகி, கடந்த மாதம் இது தொடர்பாக உமராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும் நேற்று ஹரி முத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

இந்நிலையில், ஊர் பஞ்சாயத்தார்கள் ஹரியின் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளிவைத்து, யாரும் அவர்களுடன் பேசக் கூடாது எனத் தெரிவித்தாதக் கூறப்படுதிறது. இதனால் மனமுடைந்த ஹரியின் தாயார் தற்கொலை முடிவுக்குப் போயுள்ளார். தொடர்ந்து ஹரியின் குடும்பத்தினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளிவைத்த கிராமத்தினர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கிராம மக்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.