ETV Bharat / state

திருப்பத்தூரில் ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா

author img

By

Published : Aug 25, 2020, 8:02 PM IST

திருப்பத்தூர்: மாவட்டத்தில் புதியதாக 40 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 25) புதிதாக மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 617 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், மாவட்டத்தில் இதுவரை 1,966 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சிகிச்சை பலனின்றி 55 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் 52 ஆயிரத்து 14 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 1,776 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். 3 ஆயிரத்து 643 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.