ETV Bharat / state

திருப்பத்தூரில் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு!

author img

By

Published : Jul 27, 2020, 6:05 PM IST

திருப்பத்தூர் : வாணியம்பாடியில் இருசக்கர வாகன விபத்தில் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tirupattur Bike accident
Tirupattur Bike accident

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புதூர் மஜீத் தெருவைச் சேர்ந்தவர் இர்பான். இவர் வாணியம்பாடி சிஎல் சாலையில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று (ஜூலை 26) மாலை வாணியம்பாடியில் இருந்து புதூர் பகுதியில் உள்ள வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக புதூர் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் மீது மோதியது.

Tirupattur Bike accident
Tirupattur Bike accident

இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இர்பான் தூக்கி வீசப்பட்டு, சுமார் 50 அடி உயரம் உள்ள பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர், விரைந்து வந்து இர்பான் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.