ETV Bharat / state

மனைவிக்கு அடி, உதை : தடுக்க முயன்ற மாமியார் கொலை

author img

By

Published : Dec 8, 2022, 9:28 AM IST

திருப்பத்தூரில் மனைவியை அடிக்க சென்ற போது தடுத்த மாமியாரை கீழே தள்ளி கொலை செய்ததாக மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharatகணவன்- மனைவி தகராறை தடுக்க முயன்ற மாமியாரை கொன்ற மருமகன் கைது
Etv Bharatகணவன்- மனைவி தகராறை தடுக்க முயன்ற மாமியாரை கொன்ற மருமகன் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த சின்ன வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஹேமாவதி (57) கணவனை இழந்த இவர் தனது மகளான உஷா என்பவரை, அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் உஷா தனது கணவருடன் தகராறு ஏற்பட்டு தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து நேற்று(டிச.7) இரவு பிரேம்குமார் மாமியார் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்பொழுது ஆத்திரமடைந்த பிரேம்குமார் உஷாவை தாக்க முயன்ற போது ஹேமாவதி பிரேம்குமாரை தடுத்துள்ளார். அப்பொழுது பிரேம்குமார் ஹேமாவதியை கீழே தள்ளியபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஹேமாவதி மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஹேமாவதியை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சுயநினைவின்றி இருந்த ஹேமாவதியை மருத்துவர்கள் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த ஹேமாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பிரேம்குமாரை கைது செய்த உமராபாத் காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கிய பெண்; பிளாட்பாரத்தை உடைத்து மீட்ட ஊழியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.